இன்றைய இளைய தலைமுறையினரை அதிகமாக பாதித்திருக்கும் பிணி இது. எழுதினால் கை நடுங்கும். எதை எடுத்தாலும் ஒரு தடுமாற்றம், அடிக்கடி களைப்பு, சோர்வு, தூக்கமின்மை இவைகள் முக்கிய...
Year: 2014
மூலிகையும், சுவைப்பொருளும் ஆகும். இது தமிழர் சமையலில் பெரிதும் பயன்படுத்தப்படும் ஒரு சுவைப்பொருள். இந்தச் செடி கீரையாகவும் இதன் விதைகள் சுவையூட்டியாகவும், வெந்தயக் குழம்பு, வெந்தய தோசை...
நீரிழிவு நோய் : நீரிழிவு நோயால் பலரும் பாதிக்கப்பட்டு அவதியுறுகிறார்கள் . இதை கட்டுப்படுத்த நாவல் பழத்தின் விதைகள் சிறந்த மருந்து . இதன் விதைகளை நிழலில் உலர்த்தி தூள் செய்து கொள்ள வேண்டும் . ஒரு கிராம் அளவு தூளை , காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டு வந்தால் போதும் . படிப்படியாக நீரிழிவு நோய் கட்டுப்படும் . ரத்தப்போக்கு : பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும் குணமும் நாவலுக்கு உண்டு . இதற்காக , 10 சென்டி மீட்டர் நீளமும் , 5 சென்டி மீட்டர் அகலமும் கொண்ட முற்றிய நாவல் மரத்தின் பட்டைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் . இந்த பட்டையை நன்கு நசுக்கி , 1/2 லிட்டர் தண்ணீரில் இட்டு கொதிக்க வைக்க வெண்டும் . அந்த தண்ணீரை ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி , பின் ஆற வைத்து குடிக்க வேண்டும் . தினமும் இரண்டு வேளை வீதம் 10 நாட்கள் இவ்வாறு குடித்து வந்தால் பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்தலாம் . சிறுநீர் எரிச்சல் : சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும் . இன்னும் சிலர் சிறுநீர்க்கட்டால் அவதிப்படுவார்கள் . இப்படிப்பட்டவர்கள் , நாவல் பழங்களை பிழிந்து வடிகட்டிய சாற்றை 3 தேக்கரண்டி அளவு எடுத்துக்கொள்ள வேண்டும் . அதனுடன் , ஒரு தேக்கரண்டி அளவு சர்க்கரை கலந்து குடிக்க வேண்டும் . தினமும் காலை , மாலை ஆகிய இரு வேளைகள் வீதம் 2 நாட்களுக்கு சாப்பிட்டாலே போதும் . சிறுநீர் எரிச்சல் தீர்ந்து விடும் . நீர்க்கட்டும் பறந்தே போய்விடும் . பேதி: நாவல் மரத்தின் இலைக் கொழுந்தை நசுக்கி சாறு எடுத்து , ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட வேண்டும் . காலை , மாலை என இரு வேளை 3 நாட்களுக்கு தொடர்ந்து இவ்வாறு சாப்பிட்டு வந்தால் பேதியை கட்டுப்படுத்தலாம் . தொண்டைப் புண் , தொண்டை அழற்சி : 10 சென்டிமீட்டர் நீளமும் , 5 சென்டிமீட்டர் அகலமும் கொண்ட முற்றிய நாவல் மரத்தின் பட்டையை சேகரித்துக் கொள்ள வேண்டும் . இதை 1/2 லிட்டர் தண்ணீரில் இட்டு கொதிக்க வைக்க வெண்டும் . கொதிக்கும் நீரை 1/4 லிட்டராக சுண்டக்காய்ச்சிய பின்னர் , பொறுத்துக் கொள்ளும் சூட்டில் வாய் கொப்பளித்து வர வேண்டும் . தொடர்ந்து ஓரிரு நாட்கள் இவ்வாறு செய்தால் தொண்டைப் புண் , தொண்டை அழற்சி குணமாகும் . பிற பயன்கள் : * நாவல் பழத்திற்கு சிறுநீர் பெருக்கம் , பசியை தூண்டும் தன்மை உண்டு . மேலும் , நாக்கு மற்றும் பல் ஈறுகளை சுத்தம் செய்யும் தன்மையும் இதற்கு உண்டு . * தொடர்ந்து நாவல் பழங்கள் சாப்பிட்டு வந்தால் குடல் , இரைப்பை இதயத்தின் தசைகள் வலுவாகும் . * நாவல் பழச்சாற்றுக்கும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் குணம் உண்டு . * நாவல் மரத்தின் பட்டைக்கு நரம்பை பலப்படுத்தும் சக்தியும் , மூச்சுக்குழல் அழற்சி , காசநோய் , குடல் புண்கள் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றை குணமாக்கும் சக்தியும் உண்டு . * இரத்தம் சுத்தப்படுத்துதலிலும் நாவல் முக்கிய இடம் பெறுகிறது .
முதலில் உங்கள் உயரம் மற்றும் வயதுக்கேற்ற எடையில் இருக்கிறீர்களா என்பதை பரிசோதித்துக் கொள்ளுங்கள். சென்டிமீட்டரில் உள்ள உங்கள் உயரத்துடன் 100ஐக் கழித்தால் வருவது உங்கள் எடையின் தோராய...
கோடைக் காலம் ஆரம்பித்துவிட்டது. அக்னி உக்கிரமடைவதற்கு முன்னரே வெயில் நம்மை மிரட்டத் தொடங்கிவிட்டது. அடுத்த மூன்று மாதங்களுக்கு அனல், அரிப்பு, வியர்வை, சோர்வு என்று பல தொல்லைகளும்...
நீரிழிவு,கேன்சர்,இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கும் எளிய முறை வரும் முன் காப்பது தான் சிறந்தது , தற்போது மனிதனுக்கு அதிகமாக இருக்கும் நோய்களான நீரிழிவு,கேனசர்...
கோடை வந்தால் பள்ளிக் குழந்தைகளுக்குத் தவிர்த்து அனைவருக்கும் கஷ்டம் தான். அதிலும் சர்க்கரை நோயாளிகளின் பாடு கேட்கவே வேண்டாம், திண்டாடிப் போவார்கள். எல்லாராலும் ஊட்டிக்கோ, கொடைக்கானலுக்கோ மூட்டைக்கட்ட...
சித்தர்கள் தவநிலையிலேயே நோய்களுக்கு ஏற்ற மருந்துகளைக் கண்டறிந்தனர். ஒரு பொருளின் வடிவம், தன்மை, நிறம் மூன்றையும் உடலின் பாகங்களோடு ஒப்பிட்டு, ஒத்துப்போகும் குணங்களையுடையவற்றை அப்பகுதியில் வரும் நோய்களுக்கு...
உள் குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில்...
அனைவருக்கும் தூங்குவதென்றால் ரொம்ப பிடிக்கும். அதிலும் நாள் முழுவதும் உடம்பு நோக வேலை பார்த்த பின், மெத்தைக்குள் நுழைந்து இழுத்து போர்த்தி தூங்குவதற்கு யாருக்குத் தான் பிடிக்காது?...