April 26, 2024

தமிழில்.காம்

இணைவோம் தாய் மொழயில்

பலாக்காய்!

3 min read

பலாக்காய்

பலாக்காயைக் கூட்டாகவும், தேங்காயை சேர்த்து சொதியாகவும், காரமிட்டு பொரியலாகவும் செய்து உணவுடன் சேர்த்து உண்ணலாம். உணவு செரிமாணம் ஆகாமல் பசியைக் கெடுக்கும்.

இதனை உண்பதால் மந்தம், செரியா மந்தம், அக்கினி மந்தம், பசியின்மை, ருசியின்மை, அஜீரணம், வாதம், மகாவாதம், பக்கவாதம், எரிவாதம், குதிவாதம், குடல்வாதம், மூட்டுவாதம், முடக்குவாதம், பிடிப்பு, பாதவலி, இடுப்புவலி, கழுத்துவலி, முதுகுவலி, மூட்டுவலி, வாதக்கடுப்பு, வாதக்குடைச்சல், உள்ளங்கை உள்ளங்கால் எரிச்சல், அசதி, உளைச்சல், காசம், சுவாசகாசம், இரத்தகாசம், மந்தாரகாசம், மூக்கடைப்பு, ஜலதோஷம் இவைகளை உண்டாக்கும். ஸ்கலிதம், துரித ஸ்கலிதம், சொப்பன ஸ்கலிதம், நீர் போலவும் மோர் போலவும் விந்து நீர்த்துப்போதல் இவை நீங்கும். சுக்கில பலமும் தாதுவிருத்தியும் உண்டாகும்.

’’உண்ணின் மிகுமந்த முறுதியாம் வாதநோ
யண்ணி யிளைப்பிரைப்புமண்டுங்காண் – வண்ணப்
பலாக்காய்க்கு விந்துவுமாம் பாரிலுவமை
சொலாக்காம வாரிதியே சொல்’’

– பதார்த்த குணபாடம், பாடல் எண் – 737.

Leave a Reply

Your email address will not be published.