April 26, 2024

தமிழில்.காம்

இணைவோம் தாய் மொழயில்

பப்பாளி – அற்புத மருத்துவ குணங்கள்..!!

5 min read
பப்பாளி

பப்பாளி
பப்பாளிக் காயிலிருந்து எடுக்கப்படும் பால் ( Latex ) பல்வேறு மருந்துகள் தயாரிக்கப் பயன்படுவதால் இது வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

சாப்பிடும் முறைகள்:

பப்பாளிக்காயை பொறியல் செய்து உண்ணலாம்.

அல்லது சாறு போல் அரைத்தும் அருந்தலாம்.

இப்பழத்தைத் துண்டுகளாக நறுக்கி ஒரு தட்டில் வைத்து அதன் மீது சீரகத்தூள், தேன், சிறதளவு எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடுவது மிகவும் நல்லது.

இப்பழத்துண்டுகிளின் மீது பனங்கற்கண்டுத் தூள் தூவியும் சாப்பிடலாம்.

சப்பாத்தி, தோசை போன்றவற்றிற்குத் தொட்டுக் கொள்வதற்கு ஜாம் போல பயன் படுத்தலாம்.

இரவு உணவில் பப்பாளிப் பழத்தினைக் கண்டிப்பாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அசைவப்பிரியர்களுக்கு ஓர் செய்தி:

ஆட்டு இறைச்சி சமைக்கும்போது பப்பாளிக்காயை துண்டுகளாக நறுக்கி சிறிதளவு சேர்த்து வேகவைத்தால் இறைச்சி மென்மையாகவும் சுவையாகவும் இருக்கும்.

பலன்கள்:

பப்பாளிப்பழம் செரிமான நோய்களை குணப்படுத்துவதோடு மலச்சிக்கல்களைப் போக்கும் ஆற்றல் வாய்ந்தது.

இரத்தத்தில் உள்ள அமிலத் தன்மையை அகற்றும், இரத்த சோகை என்னும் நோயை குணப்படுத்தும்.

நமது உடலில் காயம்பட்டு வெளியேறுகின்ற இரத்தமானது உடனடியாக உறைவதற்குத் தேவையான என்ஸைம்கள் இப்பழத்தில் அடங்கியுள்ளன.

கல்லீரல், மண்ணீரல் நோய்க்கு பப்பாளிப் பழமே சிறந்த உணவாகும்.

பப்பாளிப் பழத்தின் விட்டமின் ‘ ஏ ‘ மிகுதியாக அடங்கியுள்ளது.

பப்பாளிக்காயை சாறு அரைத்துக் குடித்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் வெறியேறும்.

தினசரி பப்பாளியை உண்டு வந்தால் உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு இளமைப்பொலிவோடு வாழாலாம்.

Leave a Reply

Your email address will not be published.